அனைவரையும் துன்பத்திலிருந்து விடுவிப்பதே தெய்வீகப் பிரார்த்தனையாக உள்ளது - ஜனாதிபதி வெளியிட்டுள்ள ஆசிச் செய்தி!

Reha
4 years ago
அனைவரையும் துன்பத்திலிருந்து விடுவிப்பதே தெய்வீகப் பிரார்த்தனையாக உள்ளது - ஜனாதிபதி வெளியிட்டுள்ள ஆசிச் செய்தி!

உலக வாழ் இந்துக்களால் இன்றைய தினம் மகா சிவராத்திரி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது.

மனித உயிர்களுக்குள்ளும், இவ்வுலகத்திலும் உள்ள இருள் மற்றும் அஞ்ஞானம் நீங்கி, ஞான ஒளியைச் சரணடையும் நோக்கில், மகா சிவராத்திரி விரதம் அனுஷ்டிக்கப்படுவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஒற்றுமை மற்றும் முக்திப் பேறு போன்றனவும் இந்த நன்னாளில் கிடைக்கப்பெறும் என்பது நம்பிக்கையாகும் என சிவராத்திரி விரதத்தை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைவரையும் துன்பத்திலிருந்து விடுவிப்பதே, மனித குலத்தைத் தாண்டிய தெய்வீகப் பிரார்த்தனையாக உள்ளது.

சிவபெருமானை நினைத்து விரதமிருந்து, சிவராத்திரி தினத்தன்று பெற்றுக்கொள்ளப்படும் ஆன்மீக பலம், ஒட்டுமொத்த சமூகமும் எதிர்கொண்டுவரும் சவால்களை வெல்வதற்குக் கிடைக்கும் ஆசீர்வாதமாகவே நாம் பார்க்கிறோம்.

சிவனுக்கு உகந்த நன்னாள் எடுத்துரைக்கும் நம்பிக்கை, உலக வாழ் மக்கள் அனைவரும் புத்தெழுச்சி பெறுவதற்கான உற்சாகத்தை ஏற்படுத்துவதோடு, உண்மைத்தன்மை, தியாக மனப்பான்மை மற்றும் மன்னிப்பு வழங்கல் போன்ற உண்மைக் குணங்களுடன் வாழ்வதற்கான வழியமைக்கப்படுகிறது என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4