உக்ரைனில் உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு

Mayoorikka
2 years ago
உக்ரைனில் உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு

உக்ரைன் மீது ரஷ்யா 6 நாட்களாக தாக்குதல் நடத்தி வரும் சூழ்நிலையில் அங்கு உணவுப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது.

இதன்படி அங்குள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் பொருட்களை வாங்குவதற்காக மக்கள் நீண்ட வரிசையில் நிற்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் அந்த அங்காடியில் மக்கள் வாங்குவதற்கு தேவையான எந்த உணவுப்பொருளும் இல்லாத நிலை காணப்படுகிறது. மருந்து கடைகளிலும் மக்கள் கூட்டம் நீண்டு காணப்படுகிறது.

மேலும் வெடிகுண்டு மற்றும் ஏவுகணை தாக்குதல்கள் காரணமாக உக்ரைனில் உள்ள பெரும்பாலான கடைகள் மூடியே கிடப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.