நாட்டில் கொவிட் பரவலில் தொடர்ந்து வீழ்ச்சி!
#SriLanka
#Covid 19
Prasu
2 years ago
நாட்டில் மேலும் 914 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
அதன்படி, நாட்டில் இதுவரை கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 646,948 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, நாட்டில் மேலும் 22 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
அதன்படி, நாட்டில் இதுவரை 16,244 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளனர்.
இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 609,092 ஆக அதிகரித்துள்ளது.