இன்றைய வேத வசனம் 02.03.2022: அவனவன் பெற்ற வரத்தின்படியே நீங்கள் தேவனுடைய பற்பல கிருபையுள்ள ஈவுகளைப் பகிர்ந்துகொடுக்கும் நல்ல உக்கிராணக்காரர்போல

Prathees
2 years ago
இன்றைய வேத வசனம் 02.03.2022: அவனவன் பெற்ற வரத்தின்படியே நீங்கள் தேவனுடைய பற்பல கிருபையுள்ள ஈவுகளைப் பகிர்ந்துகொடுக்கும் நல்ல உக்கிராணக்காரர்போல

அவனவன் பெற்ற வரத்தின்படியே நீங்கள் தேவனுடைய பற்பல கிருபையுள்ள ஈவுகளைப் பகிர்ந்துகொடுக்கும் நல்ல உக்கிராணக்காரர்போல, ஒருவருக்கொருவர் உதவிசெய்யுங்கள்.  1 பேதுரு 4:10

2013ஆம் ஆண்டு படமாக்கப்பட்டுக் கொண்டிருந்த தொலைக்காட்சி தொடர் ஒன்றின் இறுதிக் காட்சியில் புகழ்பெற்ற பிரிட்டிஷ் நடிகர் டேவிட் சுசெத் நடித்துக் கொண்டிருந்தார். அதேநேரம், ஒரு நாடகத்திலும் சிறப்புத் தோற்றத்தை ஏற்று நடித்துக் கொண்டிருந்தார்.

இந்த இரண்டு பெரிய வேலைகளின் மத்தியில், தன் “வாழ்க்கையின் முக்கிய பங்காக” ஆதியாகமம் தொடங்கி வெளிப்படுத்துதல் வரையிலான (752,702 வார்த்தைகள்) முழுவேதாகமத்தை, இருநூறு மணிநேரங்களுக்கு அதிகமாக செலவிட்டு ஒலிப்பதிவு செய்தார்.   

டேவிட், தன்னுடைய ஓட்டல் அறையிலிருந்த ரோமர் நிருபத்தை வாசித்து இயேசுவை ஏற்றுக்கொண்டவர். தன்னுடைய இந்த முயற்சியை, “27 ஆண்டுகால லட்சியத்தின் நிறைவேற்றம்; அதை செய்யும்படிக்கு ஏவப்பட்டேன்.

அதை நேர்த்தியாய் செய்வதற்கு பல ஆய்வுகளை மேற்கொண்டுள்ளேன்; ஆகையால் என்னால் காத்திருக்க முடியவில்லை” என்று குறிப்பிடுகிறார். பின்னர் தன் சம்பளத்தையும் காணிக்கையாக கொடுத்தார்.
வரங்களை பொறுப்பாக பேணி, பின்னர் பகிர்ந்து, தேவனை எவ்வாறு மகிமைப்படுத்த வேண்டும் என்பதற்கு, இவருடைய இந்த ஒலிப்பதிவு முயற்சி நல்ல உதாரணம்.

அதுபோன்ற ஒரு பொறுப்பான குணத்தை எதிர்பார்த்தே முதலாம் நூற்றாண்டு விசுவாசிகளுக்கு பேதுரு நிருபம் எழுதுகிறார். இராயனை வணங்காமல் இயேசுவை வணங்கியதற்காய் உபத்திரவப்படுத்தப்பட்ட இவர்களுக்கு, தங்கள் வரங்களை உபயோகித்து தேவனுக்காய் வாழ்வது, சவால் நிறைந்த ஒன்றாய் இருந்தது. “ஒருவன் போதித்தால் தேவனுடைய வாக்கியங்களின்படி போதிக்கக்கடவன்” (1 பேதுரு 4:11). “இயேசுகிறிஸ்து மூலமாய் தேவன் மகிமைப் படும்படியாய்” மற்ற திறமைகளைப் போலவே இவைகளையும் வளர்த்துக்கொள்ளலாம்.

இந்த நடிகர் தன்னுடைய தாலந்தை தேவனுக்காய் பயன்படுத்தியது போல நாமும் செய்ய முற்படுவோம். தேவன் உங்களுக்கு என்ன தாலந்தைக் கொடுத்திருக்கிறாரோ அவருடைய நாம மகிமைக்காய் அதைப் பயன்படுத்துங்கள்.  

தேவன் உங்களுக்குக் கொடுத்த ஆவியின் வரங்களையும், தாலந்துகளையும் எவ்வாறு விவரிப்பீர்கள்? தேவனுடைய நாமத்திற்காய் அவைகளை எப்படி நேர்த்தியாய் பயன்படுத்துவீர்கள்?