எட்டு மாதங்களுக்கு தேவையான பெற்றோலை இறக்குமதி செய்ய அரசு தீர்மானம்.
#SriLanka
#Fuel
Mugunthan Mugunthan
2 years ago
நாட்டில் கடந்த பெப்ரவரி 15 ஆம் திகதி தொடக்கம் எதிர்வரும் ஒக்டோபர் 14 ஆம் திகதி வரையான எட்டு மாதங்களுக்கு தேவையைான 1.8 மிலியன் பெற்றோலை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இவ்வாறு பெற்றோல் பீப்பாய்கள் இறக்குமதி செய்யும் நீண்ட கால ஒப்பந்தத்தை வழங்குவதற்காக பதிவு செய்யப்பட்ட விநியோகஸ்தர்கள் மற்றும் தற்காலிகமாக பதிவு செய்யப்பட்டுள்ள விநியோகஸ்தர்களிடமிருந்து விலைமனு கோரப்பட்டுள்ளது. அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள நிரந்தர பெறுகைக்குழுவின் பரிந்துரைக்கமைய குறித்த நீண்ட கால ஒப்பந்தத்தை, ஐக்கிய அரவு இராச்சியத்தின் எம்.எஸ். ஒ. கி. யு டிரேடிங் லிமிடட் நிறுவனத்திற்கு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.