18 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை அணிந்திருந்த 'பர்தா'வில் பொருத்தி கடத்திய பெண்

Keerthi
4 years ago
18 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை அணிந்திருந்த 'பர்தா'வில் பொருத்தி கடத்திய பெண்

டுபாயில் இருந்து, 18 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை, சிறு மணிகளாக மாற்றி, அணிந்திருந்த 'பர்தா'வில் பொருத்தி கடத்திய பெண், சுங்க அதிகாரிகளிடம் சிக்கினார்.

ஹைதராபாத் விமான நிலையத்தில், டுபாயில் இருந்து வந்த பெண் பயணி அணிந்திருந்த பர்தாவில் இருந்த வெண்ணிற மணிகள் மீது, அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதையடுத்து, பர்தாவை கழற்றி அதிகாரிகள் பரிசோதித்தனர். அப்போது, 18.18 இலட்சம் இந்திய ரூபாய் மதிப்புள்ள 350 கிராம் தங்கத்தை, வெள்ளை மணிகளாக மாற்றி, பர்தாவில் இணைத்திருப்பது உறுதியானது. இதையடுத்து, பர்தாவில் இருந்து தங்க மணிகள் சேகரிக்கும், 'வீடியோ'வையும் அதிகாரிகள் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4