காலையில் இலகுவாக செய்யக்கூடிய பாண் உப்புமா சமைத்துப்பாருங்கள்....

#Cooking #Wheat flour
காலையில் இலகுவாக செய்யக்கூடிய பாண் உப்புமா சமைத்துப்பாருங்கள்....

தேவையான பொருட்கள்: 

  • பாண் துண்டுகள் - 8 பெரிய 
  • தக்காளி - 1 
  • பெரிய வெங்காயம் - 1 
  • பச்சை மிளகாய் - 4 
  • இஞ்சி - ஒரு சிறு துண்டு 
  • மிளகாய்த் தூள் - 1/2 டீஸ்பூன் 
  • மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை 
  • கரம் மசாலா தூள் - 1/2 டீஸ்பூன் 
  • நெய் அல்லது எண்ணை - 4 டீஸ்பூன் 
  • கடுகு - 1/2 டீஸ்பூன் 
  • கடலைப் பருப்பு - 1 டீஸ்பூன் 
  • உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன் 
  • கறிவேப்பிலை - சிறிது 
  • எலுமிச்சம் பழச்சாறு - 1 டீஸ்பூன் 
  • உப்பு - 1/2 டீஸ்பூன் அல்லது தேவைக் கேற்றவாறு 

செய்முறை: 

  1. ரொட்டித் துண்டு களின் ஓரத்திலுள்ள பிரவுன் பகுதியை நீக்கி விட்டு, சிறு சதுரத் துண்டு களாக வெட்டிக் கொள்ளவும். 
  2. வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, தக்காளி ஆகிய வற்றைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். 
  3. ஒரு வாணலி யில் எண்ணை விட்டு, காய்ந்ததும் கடுகு போடவும். கடுகு வெடித்த வுடன், கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு சேர்த்து சிவக்கும் வரை வறுக்கவும். 
  4. பின் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை ஆகிய வற்றைச் சேர்த்து நன்றாக வதக்கவும். 
  5. வெங்காயம் நன்றாக வதங்கியப் பின், தக்காளித் துண்டு களைச் சேர்த்து ஓரிரு வினாடிகள் வதக்கவும். 
  6. அத்துடன் ரொட்டித் துண்டுகளைச் சேர்த்து இலேசாகக் கிளறி விடவும். 
  7. பின் அதில் மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா, உப்புச் சேர்த்து, ஒரு கை தண்ணீரைத் தெளித்து எல்லா வற்றையும் நன்றாகக் கிளறி விடவும். 
  8.  மூடி போட்டு, சிறு தீயில் வைத்து அவ்வப் பொழுது கிளறி விட்டு, பத்து நிமிடங்கள் கழித்து, 
  9. கீழே இறக்கி வைத்து, எலுமிச்சம் பழச்சாறைச் சேர்த்துக் கிளறி பரிமாறவும்.