இலங்கையில் 26 ஆண்டுகளுக்குப் பின்னர் ஏழரை மணிநேர மின்வெட்டு

#SriLanka #Power #history
இலங்கையில் 26 ஆண்டுகளுக்குப் பின்னர் ஏழரை மணிநேர மின்வெட்டு

நாட்டில் 26 ஆண்டுகளுக்கு பின் நேற்று ஏழரை மணிநேரம் மின்சாரத்தை துண்டிக்க பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவினால், மின்சார சபைக்கு அனுமதி வழங்கப்பட்டது.
இதன் படி காலை 8மணி முதல் மாலை 6 மணி வரையான காலப்பகுதியில், 5 மணி நேரம் மின்சார துண்டிப்பு அமுலாக்கப்பட்டதாக கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில், பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார். மாலை 6 மணிமுதல் இரவு 11 மணிவரையான காலப்பகுதியில், இரண்டரை மணிநேரமும் மின்தடை அமுலாக்கப்பட்டது.

மின்சார உற்பத்திக்கு அவசியமான எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கு, அடுத்த வாரத்திற்குள் நிதி ஒதுக்கிட்டை மேற்கொள்ளாவிட்டால், மத்திய வங்கிக்குக்கும், திறைசேரிக்கும் எதிராக வழக்குத் தொடர உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.