எரிபொருள் வரிசையில் நிற்பவர்களுக்கு பாற்சோறு சமைத்துக் கொடுத்த மக்கள்
Prathees
2 years ago
எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக நேற்று வஸ்கடுவ முதல் பொத்துப்பிட்டிய வரையான காலி வீதியில் வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றன.
வரிசையில் காத்திருப்பவர்களுக்கு பாற்சோறு, குளிர்பானம் போன்றவற்றை அப்பகுதி மக்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.
பொதுப்பிட்டி பூஜாராம ஆலயத்திற்கு முன்பாக ஒன்று கூடிய பிரதேசவாசிகள், வீதியோரம் பாற்சோறு தயாரித்து வரிசையில் நின்றவர்களுக்கு விநியோகம் செய்தனர்.
அவ்வாறு வரிசை இருந்தால் பாற்சோறு வழங்குவது தொடர்ந்து நடைபெறும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.