நாட்டை மூடச் சொன்னதும் கோபமடைந்த கோத்தபாய-விமல் காட்டம்
Mayoorikka
2 years ago
தற்போதைய சூழ்நிலையில் நாடு திறந்திருக்கும் காலப்பகுதியில் தாம் உள்ளிட்ட 11 கட்சித் தலைவர்கள் நாட்டை மூடுமாறு ஜனாதிபதியிடம் கோரியபோது ஜனாதிபதி கோபமடைந்ததாக முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாகவே ஜனாதிபதி தம்மை தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரத்த குரலில் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு பின்னர் தனது இராஜினாமா கடிதத்தை சமர்ப்பிக்குமாறு கூறியதாக திரு.வீரவன்ச இன்று (04/03) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
பிற்பாடு திரு உதய கம்மன்பில மற்றும் திரு வாசுதேவ நாணயக்கார ஆகியோரிடமும் ஜனாதிபதி அவ்வாறே கதைத்ததாகவும், மற்றவர்களைப் போல் தன்னால் சகித்துக்கொள்ள முடியவில்லை எனவும் வீரவன்ச சுட்டிக்காட்டியுள்ளார்.