அரசாங்கத்தில் விரக்தி: நாட்டை விட்டு வெளியேறும் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள்
Prathees
2 years ago
அரசாங்க பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று நாட்டை விட்டு வெளியேறத் தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பல்வேறு காரணங்களுக்காக நாட்டை விட்டு வெளியேறுபவர்களில் அரசியலில் விரக்தியடைந்த சிலர் இருப்பதாக கூறப்படுகிறது.
அதுவும் நாடாளுமன்றத்தின் விடுப்புக்கு ஒப்புதல் கிடைத்ததை அடுத்து இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க மூன்று மாத காலமாக ஜப்பானுக்கு சென்றுள்ளார்
அமைச்சின் செயற்பாடுகளினால் ஏற்பட்ட விரக்தியின் காரணமாக இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா தற்போது வெளிநாட்டில் தங்கியுள்ளார்.
இதேவேளை, பதவிகள் கிடைக்காமல் விரக்தியடைந்துள்ள மற்றுமொரு நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியலில் இருந்து விலகி வெளிநாடு செல்லவுள்ளதாக தமது நண்பர்களிடம் ஏற்கனவே தெரிவித்திருந்தனர்.