இலங்கையில் ஹொட்டல்கள் பேக்கரிகள் தொடர்பில் வெளியான திடுக்கிடும் தகவல்!

Mayoorikka
2 years ago
இலங்கையில் ஹொட்டல்கள் பேக்கரிகள் தொடர்பில் வெளியான திடுக்கிடும் தகவல்!

நாடு முழுவதும் எரிவாயு, கோதுமை மா தட்டுப்பாடு மற்றும் மின்வெட்டு காரணமாக 60 சதவீதமான ஹோட்டல்கள், உணவகங்கள் மற்றும் பேக்கரிகள் மூடப்பட்டுள்ளதாக உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

சில ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் சில நாட்களாக மூடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதனால், தொழில் நடத்த முடியாமல், வாடகை மற்றும் சம்பளம் வழங்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசாங்கம் உடனடியாக இப்பிரச்னைக்கு தீர்வு காணாவிட்டால், ஹோட்டல், உணவகம், பேக்கரி தொழிலில் இருந்து முழுவதுமாக விலக நேரிடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் மூடப்படுவதால் மக்கள் உணவு வாங்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக அவர்  சுட்டிக்காட்டியுள்ளார்.