பொருளாதார வீழ்ச்சிக்கான காரணத்தை கூறும் முன்னாள் ஜனாதிபதி

Prathees
2 years ago
பொருளாதார வீழ்ச்சிக்கான காரணத்தை கூறும் முன்னாள் ஜனாதிபதி

கடந்த 2005ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரை இலங்கை ஆட்சியாளர்களின் ஊழல் மோசடிகளால் இலங்கை பொருளாதார ரீதியாக வங்குரோத்து நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மறைந்த பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க மற்றும் அவரது ஆட்சிக்காலம் பற்றிய புகைப்படங்கள் மற்றும் விபரங்கள் அடங்கிய புத்தகம் சிறிமாவோ பண்டாரநாயக்க அருங்காட்சியகத்திற்கு வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.