டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரிப்பு!

Prabha Praneetha
2 years ago
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரிப்பு!

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் 10 ஆயிரத்து 688 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சமூக சுகாதார நிபுணர் விசேட வைத்தியர் அனோஜா தீரசிங்க இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

கடந்த வருடத்தின் முதல் 9 வாரக்காலப்பகுதியில் 4 ஆயிரத்து 911 டெங்கு நோயாளர்களே அடையாளம் காணப்பட்டிருந்தனர்.

தற்போதைய நிலையில், 11 மாவட்டங்களில் 38 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் டெங்கு நோய் பரவும் அபாய வலயங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.