500 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இந்தியாவிடமிருந்து கடன்: எதற்காக?

Mayoorikka
2 years ago
500 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இந்தியாவிடமிருந்து கடன்: எதற்காக?

எரிபொருள் கொள்வனவுக்காக இலங்கைக்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கடன் வழங்க இந்திய மத்திய வங்கி அனுமதியளித்துள்ளது.

அதன்படி, இந்தியாவில் உள்ள ஏற்றுமதியாளர்களிடமிருந்து மொத்தக் கடனில் குறைந்தது 75% பொருட்கள் மற்றும் சேவைகளை கொள்வனவு செய்யவேண்டும் என்றும் மீதமுள்ள 25% இந்தியா தவிர்ந்த வேறு நாடுகளிடமிருந்து கொள்வனவுகளை மேற்கொள்ளப்  பயன்படுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.