பாடசாலைகளுக்கான குடிநீர் கட்டணம் நிறுத்தம்: பெற்றோருக்கு மேலும் நெருக்கடி

Prathees
2 years ago
பாடசாலைகளுக்கான குடிநீர் கட்டணம் நிறுத்தம்: பெற்றோருக்கு மேலும் நெருக்கடி

பொது திறைசேரி மூலம் பாடசாலைகளுக்கான குடிநீர் கட்டணத்தை செலுத்துவது இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த முடிவு பெற்றோருக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாக சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலிங் தெரிவித்தார்.

இது தொடர்பில் நீர்வழங்கலுக்குப் பொறுப்பான அமைச்சர் வாசுதேவ நாணயக்கார மற்றும் கல்வி அதிகாரிகளுக்கு அறிவிக்க தமது சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் மேலும் தெரிவித்தார்.