தூங்கிக் கொண்டிருந்த மூன்று குழந்தைகளை பொல்லால் தாக்கிய தந்தை: குழந்தைகள் உயிரிழந்துவிட்டதாக எண்ணி தானும் தற்கொலை

Prathees
2 years ago
தூங்கிக் கொண்டிருந்த மூன்று குழந்தைகளை பொல்லால் தாக்கிய தந்தை: குழந்தைகள் உயிரிழந்துவிட்டதாக எண்ணி தானும் தற்கொலை

கலேவெல மகுலுகஸ்வெவ பிரதேசத்தில் தந்தை ஒருவர் இன்று (12) அதிகாலை தூங்கிக் கொண்டிருந்த அவரது மூன்று குழந்தைகளையும் பொல்லால் தலையில் கொடூரமாக தாக்கிவிட்டு, இறந்துவிட்டதாகக் கூறி தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவமொன்று பதிவாகியுள்ளது. 

அவரது மனைவி அவரையும் குடும்பத்தையும் விட்டுச் சென்றுவிட்டார்.

குழந்தைகளும் குழந்தைகளின் பாட்டியும் வசித்து வந்த வீட்டில் 36 வயதுடைய குறித்த நபர் கூலி வேலை செய்து குடும்பத்தை நடாத்தி வந்துள்ளார்.

குடும்ப பிரச்சனைகள் மற்றும் பொருளாதார பிரச்சனைகள் குறித்து பேஸ்புக்கில் பதிவிட்டு குழந்தைகளை கொலை செய்து விட்டு தானும்  தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

அவரது 5 மற்றும் 8 வயதுடைய இரண்டு ஆண் சிறுவர்களும், அவர்களது 13 வயது மகளும் இரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளனர். ஆனால் அந்த நேரத்தில் மூவரும் உயழரிழக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது. 

எனினும், குழந்தைகள்  இறந்துவிட்டதாக நினைத்த தந்தை  வீட்டின் பின்புறமுள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டதை பொலிசார் கண்டுபிடித்தனர்.

இறந்தவர் இராணுவத்தைச் சேர்ந்தவர் என்றும்  அதிலிருந்து விட்டுவிட்டு கூலி வேலை செய்கிறார் என்றும்  கிராம மக்கள் கூறுகின்றனர்.

உயிரிழந்தவர் 36 வயதான மிஹிர நுவான் சாமிகர என அடையாளம் காணப்பட்டுள்ளதாக மகுலுகஸ்வெவ பொலிஸார் தெரிவித்தனர்.

குழந்தைகளின் தாய் மிஹிரவிடம் கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறி ஒரு மாதத்திற்கு மேல் ஆகிவிட்டது.

பின்னர் தனது முகநூல் கணக்கில் வெள்ளைக் கொடி போட்டோவை பதிவிட்டு நண்பர்களுக்கு தான் சாகப்போவதாக சைகை காட்டிவிட்டு, அதிகாலையில் படுக்கையில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தைகளின் தலையில் கட்டையால் அடித்துவிட்டு, தான்  தற்கொலை செய்து கொண்டார். .

வீட்டின் வெளியே அறையில் உறங்கிக் கொண்டிருந்த மிஹிரவின் தாயார், குழந்தைகளின் அலறல் சத்தம் காரணமாக கதவைத் திறந்து பார்த்தபோது இரத்த வெள்ளத்தின் நடுவே குழந்தைகள் இருப்பதைக் கண்டு அருகில் இருந்தவர்களுடன் குழந்தைகளை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளார்.

தம்புள்ளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இரண்டு குழந்தைகளின் நிலைமை மோசமடைந்ததையடுத்து கண்டி பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

காயமடைந்த 13 வயது சிறுமி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது, 

என்ன நடந்தது என்று எனக்கு தெரியாது,  என் தந்தை என்னை அடித்ததாக எனக்கு நினைவில் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.

தற்கொலை செய்து கொண்ட மிஹிரா நேற்று மாலை படுகொலையை திட்டமிட்டு தனது முகநூல் கணக்கில் பதிவு செய்துள்ளார்.

அவர் பயன்படுத்திய 3 அடி நீள தடி இது வீட்டின் பின்புறம் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது.