எவ்வாறான பிரச்சினைகள் வந்தாலும் வசந்தகால கொண்டாட்டம் நடாத்தப்படும்!
Mayoorikka
2 years ago
நாட்டில் எவ்வாறான பிரச்சினைகள் காணப்படுகின்ற போதும், நுவரெலியா வசந்தகால கொண்டாட்டம் நடாத்தப்படுமென வனசீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் சி.பி.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஏப்ரல் மாதம் வசந்தகால கொண்டாட்ட நிகழ்வுகள் ஆரம்பமாகவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிகழ்வில் பெருமளவான வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தருவதன் காரணமாக அவர்களுக்கான பாதுகாப்பு தொடர்பில் பொலிஸார் விசேட கவனம் செலுத்த வேண்டியுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காடடியுள்ளார்