உடலுக்கு ஆற்றலை அளிக்கவல்ல சுவையான பனீர் தோசை சுடுவது எப்படி?

#Cooking #meal #dinner
உடலுக்கு ஆற்றலை அளிக்கவல்ல சுவையான பனீர் தோசை சுடுவது எப்படி?

தேவையானவை: 

  • பச்சரிசி - ஒரு கப், 
  • புழுங்கலரிசி - ஒரு கப், 
  • துருவிய பனீர் - ஒரு கப், 
  • பச்சை மிளகாய் - 2, 
  • உப்பு - தேவைக்கேற்ப, 
  • பொடியாக அரிந்த கொத்துமல்லி - ஒரு டீஸ்பூன், 
  • எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை:

  1. பச்சரிசி, புழுங்கலரிசி இரண்டையும் சேர்த்து இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும். பனீரை துருவி வைத்துக் கொள்ளவும். 
  2. பச்சை மிளகாயையும் கொத்து மல்லியையும் பொடியாக அரிந்து வைத்துக் கொள்ளவும். ஊறிய அரிசியை உப்பு சேர்த்து நைஸாக அரைக்கவும். 
  3. பின்னர் அதனுடன் துருவிய பனீர், பச்சை மிளகாய், கொத்துமல்லி இவற்றைச் சேர்த்து, மாவை சிறிது தளர கலந்து, சிறிது கனமான தோசைகளாக வார்த்து எடுக்கவும். 
  4. சோயாபனீர் சேர்த்தும் செய்யலாம். உடம்புக்கு மிகவும் நல்லது. 
  5. புளிப்பு வேண்டியவர்கள் மாவை 5 மணி நேரம் புளிக்க வைத்து, பிறகு பனீர் சேர்த்துச் செய்யலாம். சூடாக சாப்பிட்டால் சுவை அதிகம்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4