நீர் குழாய் ஒன்றில் ஏற்பட்ட திடீர் உடைப்பு காரணமாக பல பகுதிகளில் 24 மணி நேர நீர் வெட்டு
#SriLanka
#water
Mugunthan Mugunthan
2 years ago
நீர் குழாய் ஒன்றில் ஏற்பட்ட திடீர் உடைப்பு காரணமாக பல பிரதேசங்களுக்கு நீர் விநியோகத்தை 24 மணித்தியாலங்களுக்கு இடைநிறுத்துவதற்கு நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்படி, தெஹிவளை, கல்கிசை, இரத்மலானை, கொழும்பு 05, கொழும்பு 06, பத்தரமுல்ல, பெலவத்தை, உடுமுல்லை மற்றும் ஹிம்புட்டானை ஆகிய பகுதிகளுக்கு நீர் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது.
இதன் காரணமாக கொழும்பு 04 பகுதிக்கு குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் செய்யப்படவுள்ளது.