தற்போதைய அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வந்த மக்களே அவர்களை வெளியேற சொல்லும் நிலை ஏற்பட்டுள்ளது - எம்.ஏ.சுமந்திரன்

#M. A. Sumanthiran #government #Lanka4
Reha
2 years ago
தற்போதைய அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வந்த மக்களே அவர்களை வெளியேற சொல்லும் நிலை ஏற்பட்டுள்ளது - எம்.ஏ.சுமந்திரன்

தற்போதைய அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வந்த மக்களே அவர்களை ஆட்சியை விட்டு செல்லுமாறு வலியுறுத்தும் நிலை ஏற்பட்டுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் ஊடகங்களுக்கு கருத்துரைத்த அவர், தற்போது அரசாங்கத்திற்கு எதிராக முன்னெடுக்கப்படும் போராட்டங்கள் எதிர்வரும் காலங்களில் மேலும் அதிகரிக்கக் கூடும் என குறிப்பிட்டுள்ளார்.