நாட்டில் இன்றும் மின்வெட்டு அமுல்!

Mayoorikka
2 years ago
நாட்டில் இன்றும் மின்வெட்டு அமுல்!

நாட்டில் இன்றைய தினமும் மின்துண்டிப்பை  அமுல்படுத்த இலங்கை மின்சார சபைக்கு இலங்கை பொதுப்பயன்பாட்டுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

இதன்படி, A முதல் L வரையான வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களில் இன்றைய தினம் 5 மணிநேரம் சுழற்சி முறையில் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளது.

இன்று முற்பகல் 8 மணி முதல் மாலை 6 மணி வரையான காலப் பகுதிக்குள் 3 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும், மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரையான காலப் பகுதிக்குள் ஒரு மணித்தியாலமும் 40 நிமிடங்களும் மின் துண்டிப்பு அமுலாக்கப்படவுள்ளது.

அத்துடன், P முதல் W வரையான வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களில் 3 மணித்தியாலங்களும் 40 நிமிடங்களும் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளது.

இதன்படி, குறித்த வலயங்களில் காலை 9 மணிமுதல் பிற்பகல் 5 மணிவரையான காலப்பகுதியினுள் இரண்டு மணித்தியாலங்களும் 40 நிமிடங்களும், மாலை 5 மணிமுதல் இரவு 9 மணிவரையான காலப்பகுதியினுள் ஒரு மணித்தியாலமும் மின் துண்டிப்பை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.