பெண்களின் அணிகலங்களின் பயன்கள் உண்மையில் என்ன தெரியுமா? துஷ்பிரயோகப்படுத்தாதீர்கள்...

#Health #Jewelry #wear
பெண்களின் அணிகலங்களின் பயன்கள் உண்மையில் என்ன தெரியுமா? துஷ்பிரயோகப்படுத்தாதீர்கள்...

தமிழர் பாரம்பரிய நடவடிக்கைகள் மறை முகமாக விஞ்ஞான கருத்துகளை கொண்டிரு ப்பவை. அதுபோல நகைகள் நம்முடைய உடல் ஆரோக்கி யத்தைப் பேணுவதற் காக உருவானவை என்பதே உண்மை. நகைகள் அணிவதன் மூலம் நம் உடலில் உள்ள முக்கிய வர்மப் புள்ளி களைத் தூண்டி நம் உடலின் ஒவ்வொரு உறுப்பு களையும் பராமரிக்கிறது.

எத்தனையோ பெறு மதிப்புள்ள பொருட்கள் இருந்த போதிலும், அதிகமான ஆபரண ங்கள் தங்கத்தில் அணியப் படுவதன் காரணம்,... இந்தியா போன்ற கீழைய நாடுகள், பூமத்திய ரேகைக்கு அண்மையில் இருப்பதால் இவை வெப்பமான நாடுகளாகும். இந்த வெப்பத்தை குறைத்து ,உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க தங்கம் மட்டுமே ஏற்றது. அத்துடன் தங்கம் எப்பொழுதும் நம் உடலை தொட்டுக் கொண்டிருப் பதால் நாளடை வில் உடலின் அழகை அதிகரிக்கும் ஆற்றலுள்ளது.

அதாவது நமக்கு நோய்கள் உருவாவதை தடுப்பதற்கு மருந்து களை உபயோகிப் பதை விட நகைகளை நாம் அணிந்தால் அது நல்ல பயன் தரும். தங்கத்தில் என்று இல்லாமல் (முத்து, வெள்ளி போன்ற வற்றில்) நாம் நகை அணிதல் கட்டாயமாக இருந்ததற்கு காரணம் நமது தமிழர் பாரம்பரிய த்தில் நமது ஆரோக்கி யத்தை முன் நிறுத்து வதற்காகத் தான்.
கொலுசு அணிதல்

ஆரம்ப காலத்தில் நாம் எல்லோரும் கொலுசு அணிந்தோம். பின்னர் இடைப்பட்ட காலத்தில் அது பழங்கால பழக்கம் என்று கைவிடப் பட்டது. தற்பொழுது அது மீண்டும் வழக்க த்திற்கு வந்ததுள்ளது. அதிலும் ஒற்றைக் காலில் கொலுசு அணிவது தான் பேஷன். பொதுவாக எல்லா நகை களையும் தங்கத்தில் அணியும் நாம், காலில் அணியும் நகைகளை வெள்ளியில் தான் அணிகிறோம். தங்கத்தில் மகாலட்சுமி இருப்பதால் நாம் காலில் அணியும் நகைகள் தங்கத்தில் அணிவ தில்லை.

அத்துடன் வெள்ளி நகைகள் நம் ஆயுளை விருத்தி செய்யக் கூடியவை. நம் உடல் சூட்டை அகற்றி குளிர்ச்சி யாக்கி சருமத்தை ஆரோக்கிய மாக்கும். சிறுவயதி லிருந்தே குழந்தை களுக்கு கொலுசு அணிவித்து விடுகின்றோம். குழந்தைக்கு நடக்கும்போது எப்போதும் சங்கீதம் கேட்க வேண்டும்

என்பதாலும் குடும்பத் தினருக்கு குழந்தையின் ஒவ்வொரு அசைவையும் கண் காணிப்பதற்கும் கொலுசு அணிவிக்கப் படுகிறது. உணர்ச்சி வசப்படுதல் என்பது எப்பொழுதும் ஆண்களை விட பெண் களுக்கு அதிகம். வெள்ளி கொலுசு குதிகால் நரம்பினை தொட்டு கொண்டிருப்ப தால் குதிகால் பின் நரம்பின் வழியாக மூளைக்கு செல்லும் உணர்சி களைக் குறைத்து கட்டுப் படுத்துகிறது. மேலும் பெண்களின் இடுப்பு பகுதியை ஸ்திரப் படுத்தவும் கொலுசு பயன் படுகிறது.

மெட்டி அணிதல்

மெட்டி என்பது திருமண மான பெண்கள் மட்டுமே அணிய வேண்டும். ஏன் என்றால் பெண்களது கருப்பைக்கான முக்கிய நரம்புகள் கால் விரல் களிலேயே இருக்கிறது. கொலுசைப் போலவே மெட்டியும் கட்டாயம் வெள்ளியில் தான் அணிய வேண்டும். ஏன் என்றால் வெள்ளியில் இருக்கும் ஒருவித காந்த சக்தி கால் நரம்புகளில் ஊ டுருவி நோய்களை தடுக்கும் ஆற்றல்உள்ளது.

முக்கியமாக கருப்பை நோய்களை கட்டு படுத்துகிறது. கர்ப்பத்தின் போது உருவாகும் மயக்கம், வாந்தி போன்ற வற்றை குறைக்கவும் கருப்பையின் நீர் சமநிலையை பேணு வதற்கும் மெட்டி அவசியப் படுகிறது. கால் விரலில் அணியும் மெட்டி நாம் நடக்கையில் பூமியுடன் அழுத்தப் படுவதால் எமது உடல் பிணிகளை, முக்கிய மாக கர்ப்பிணிப் பெண்களது உடல் பிணிகளைக் குறைகிறது.

அரை நாண் கொடி அணிதல்

சிறு குழந்தை யாக நாம் இருக்கை யில் நமக்கு இடுப்பில் அரை நாண் கொடி அணிவிப்பது வழக்கம். உடலின் நடுப்பகுதியான இடுப்பில் அணிவிப் பதன் முக்கிய நோக்கமே உடலில் குருதி சுற்றோட்ட த்தை பேணுவதற்கு தான். மேலிருந்து கீழாகவும் கீழிருந்து மேலாகவும் செல்லும் இரத்த ஓட்டம் சீராகவும் சமநிலை யுடனும் இருக்கவே அரை நாண் கொடி பயன் படுகிறது. அத்துடன் ஆண் பெண் மலட்டுத் தன்மையை நீக்கவும் உடல் உஷ்ண த்தைக் குறைக்கவும் அரை நாண் கொடி பயன் படுகிறது.

மோதிரம் அணிதல்

விரல்களில் அணியப் படும் மோதிரம் டென்ஷன் குறைக்கவும், இனிமை யான பேச்சு திறன், அழகான குரல் வளம் என்ப வற்றுக்கு உதவுகிறது. அதிலும் மோதிர விரலில் அணியப் படுவதன் முக்கிய காரணம் ஆண் பெண் இனவிருத்தி உறுப்புகளை ஸ்திரப் படுத்தவும் பாலுணர் வுக்கும் உதவுகிறது. 

அதனால் தான், திருமண மோதிரம் கட்டாயமாக மோதிர விரலில் அணிய கட்டயாப் படுத்தப் படுகிறது. விரல்களில் மோதிரம் அணிவதால் இதயக் கோளாறுகள் மற்றும் வயிறு கோளாறுகள் என்பவை நீங்கவும் உதவுகிறது. சுண்டு விரலில் மோதிரம் அணிதல் தடுக்க படுகிறது ஏன் என்றால் இதய கோளாறுகள் ஏற்படும்.

மூக்குத்தி அணிதல்

மூக்குத்தி அணிதல் என்பது காலம் காலமாக நடைமுறையில் இருக்கும் ஒரு பழக்கம் இன்றும் கூட பேஷன் உலகத்தில் முக்கியத்துவம் பெறுகிறது. சிறு குழந்தைகளுக்கு மூக்குத்தி குத்தும் பழக்கம் இல்லை. பருவப்பெண்களே மூக்குத்தி அணிய வேண்டும் .பருவப் பெண்களுக்கு மண்டை ஓட்டுப் பகுதியில் சில வாயுக்கள் காணப்படுகிறது.

இந்த வாயுக்களை உடலில் இருந்து அகற்றுவதற்கு தான், மூக்கில் துளை இடும் பழக்கம் உருவானது. இதனால் பெண்களுக்கு மூக்கு தொடர்பான பிரச்சனை கள் நிவர்த்தி யாகும். காற்றை வெளியேற் றுவதில் ஆண்களுக்கு வலப் புறமும் பெண் களுக்கு இடப்புறமும் பலமான வலுவான பகுதி களாகும். 

வலது புறமாக சுவாசம் செல்லும் போது தான் உடலுக்கும் மனதுக்கும் பலன் கிடைக்கும். முறையான சுவாச பரிமாற்ற த்துக்கு உதவுகிறது மூக்குத்தி.நமது மூளையின் அடி பகுதியில் நரம்பு மண்டலங் களை கட்டுப் படுத்தக் கூடிய சில பகுதிகள் உணர்ச்சி களை செயல்படுத்தும். இந்த பகுதியின் செயல் பாட்டை பெண்களுக்கு அதிகப் படுத்த மூக்குத்தி அவசியப் படுகிறது.

மூக்குத்தி அணிதல் என்பது காலம் காலமாக நடைமுறையில் இருக்கும் ஒரு பழக்கம் இன்றும் கூட பேஷன் உலகத்தில் முக்கியத்துவம் பெறுகிறது. சிறு குழந்தைகளுக்கு மூக்குத்தி குத்தும் பழக்கம் இல்லை. பருவப்பெண்களே மூக்குத்தி அணிய வேண்டும் .பருவப் பெண்களுக்கு மண்டை ஓட்டுப் பகுதியில் சில வாயுக்கள் காணப்படுகிறது.

இந்த வாயுக்களை உடலில் இருந்து அகற்றுவதற்கு தான், மூக்கில் துளை இடும் பழக்கம் உருவானது. இதனால் பெண்களுக்கு மூக்கு தொடர்பான பிரச்சனை கள் நிவர்த்தி யாகும். காற்றை வெளியேற் றுவதில் ஆண்களுக்கு வலப் புறமும் பெண் களுக்கு இடப்புறமும் பலமான வலுவான பகுதி களாகும். 

வலது புறமாக சுவாசம் செல்லும் போது தான் உடலுக்கும் மனதுக்கும் பலன் கிடைக்கும். முறையான சுவாச பரிமாற்ற த்துக்கு உதவுகிறது மூக்குத்தி.நமது மூளையின் அடி பகுதியில் நரம்பு மண்டலங் களை கட்டுப் படுத்தக் கூடிய சில பகுதிகள் உணர்ச்சி களை செயல்படுத்தும். இந்த பகுதியின் செயல் பாட்டை பெண்களுக்கு அதிகப் படுத்த மூக்குத்தி அவசியப் படுகிறது.
பெண்களின் இடதுபுற மூக்கில் குத்தக் கூடிய மூக்குத்தி, வலது புற மூளையை யும் வலது புற மூக்கில் குத்தும் மூக்குத்தி இடதுபுற மூளை யையும் இயக்க கூடிய தாக உள்ளது.

இன்று இருபுறமும் மூக்குத்தி அணிந்தாலும் சாஸ்திரப்படி பெண்கள் இடப்புறம் தான் அணிய வேண்டும். இடப்புறம் அணிவ தால் சிந்தனா சக்தி,மனம் ஒரு நிலைப் படுத்த படுகிறது. 

நமது முன் நெற்றிப்பகுதியில் இருந்து சில நரம்புகள் மூக்கு தூவாரம் வரை கீழ் இறங்கி மூக்கு பகுதியில் மெல்லிய துவாரங்களாக இருக்கும். இதில் அணியப்படும் தங்க மூக்குத்தி உடல் வெப்பத்தை குறைத்து குளிர்ச்சி அளிக்கும். மூக்கு மடலில் ஏற்படுத்தப் படும் துவாரம் நரம்பு மணடல த்தில் உள்ள அசுத்த வாயுவை அகற்றும். ஒற்றைத் தலைவலி, நரம்பு நோய்கள், உளச்சோர்வு ஏற்படமால் மூக்குத்தி தடுக்கிறது.

காதணி அணிதல்

தோடு என்பது காதில் அணியும் ஆபரணம். பெண்கள் அனை வராலும் அணியும் இந்த ஆபரண த்தை ஆண்களில் ஒரு பிரிவினர் அணிவார்கள். காது குத்துதல் என்பது தமிழ் சமூகத்தில் ஒரு முக்கிய சடங்காகவே கொண்டாடப் படுகிறது. உலோகம், கண்ணாடி போன்ற வற்றால் காதணிகள் அணியப் படுகிறது.

காது சோனையில் துவாரமிட்டு காதணி அணிவதன் முக்கிய நோக்கம் கண் பார்வையை வலுப் படுத்தவே. வயிறும் கல்லீரலும் தூண்டப் படும் ஜீரணக் கோளாறு, கண்பார்வை கோளாறு சரியாகும்.

வளையல்

வளையல் என்பது பாரம்பரிய அணி கலனாகும். தங்கம் மற்றும் கண்ணாடி வளையல் ஆரம்ப காலத்தில் அணிந்தாலும் தற்பொழுது பிளாஸ்டிக் வளையல் களின் பயன்பாடு அதிகரித் துள்ளது. வளையல் அணிவதன் முக்கிய நோக்கம் ஹார்மோன் களின் குறைப் பாடுகளை களை வதாகும்.

பிறந்தது முதல் நமது உடலில் ஹார்மோன் களின் குறைப் பாடுகள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும்.
அதனால் அக்காலத்தில் இறுதி வரை வளையல் அணிதல் கட்டாய மாக்கப் பட்டு இருந்தது. அதிலும் கர்ப்பமான பெண் களுக்கு வளையல் அணிவிக்கும் வளைகாப்பு சடங்கு முக்கியம் பெறுகிறது நமது பாரம்பரி யத்தில். வளையல் அணிவதால் சுவாசப்பாதை அழற்சி, ஆஸ்துமா போன்றவை குறையும். நன்றாக தூக்கம் வரும். கர்ப்ப காலத்தில் ஏற்படும் ஹார்மோன் குறைபாடுகள் நீங்கவும் உடல் சூடு தனியவும் இந்த வழக்கம் நடை முறைக்கு வந்தது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!