அரசிடம் நிவாரணம் கோரும் உணவக உரிமையாளர்கள்!
Mayoorikka
2 years ago
எரிபொருள் விலையேற்றம் காரணமாக தமது வியாபாரங்களை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அனைத்துப் பொருட்களின் விலைகளும் அதிகரித்துள்ளமையினால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக அதன் தலைவர் இந்திக்க அனுரகுமார ஊடகவியலாளர் சந்திப்பில் குறிப்பிட்டார்.
இதனால் தமது தொழிலை நடத்த அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.