சஜித்திற்கும் மஹிந்தானந்தவிற்கும் இடையில் காரசார விவாதம்: இரகசியத்தை போட்டுடைத்த மஹிந்தானந்த

Mayoorikka
2 years ago
 சஜித்திற்கும் மஹிந்தானந்தவிற்கும் இடையில் காரசார விவாதம்: இரகசியத்தை போட்டுடைத்த மஹிந்தானந்த

உணவுப் பாதுகாப்பு தொடர்பில் எதிர்காலத்தில் பிரச்சினை ஏற்படாது என விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். 

இன்று பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

அதன் பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவிற்கும் இடையில் காரசாரமான கலந்துரையாடல் இடம்பெற்றது. 

ஐக்கிய மக்கள் சக்தியின்  உறுப்பினர்கள் குழுவொன்று எதிர்காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சியில் இணையத் தயாராகி வருவதாக அமைச்சர் மஹிந்தானந்த அலுத்மகே தெரிவித்துள்ளார்.