மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து எரிபொருளை இறக்குமதி செய்யுமாறு சஜித்திடம் கோரிக்கை விடுத்த அமைச்சர்
தற்போதைய எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வாக மத்திய கிழக்கின் மூன்று நாடுகளில் இருந்து எரிபொருளை இறக்குமதி செய்யுமாறு சஜித் பிறமதாசவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அரசாங்க பிரதம கொறடா ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ சஜித் பிறமதாசவிடம் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.
அப்படியானால் எதிர்க்கட்சித் தலைவர் மீது மக்களுக்கு இந்த தருணத்தில் மிகுந்த மரியாதை ஏற்படும் என்றார்.
அந்த நாடுகள் தனது அரசாங்கத்துடன் வணிகம் செய்ய தயாராக உள்ளதாகவும்,
குழந்தையின்மை அறுவை சிகிச்சை பற்றி பேசி இனவாதத்தை விதைக்கும் அரசை அந்த நாடுகள் சமாளிக்க விரும்பவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் இதன்போது பதிலளித்தார்.
இராஜதந்திர பரிவர்த்தனைகள் அரசாங்கத்திற்கும் அரசாங்கத்திற்கும் இடையில் நடைபெறுகின்றன, அரசாங்கத்திற்கும் எதிர்க்கட்சிக்கும் இடையில் அல்ல என்று அவர் கூறினார்.
பாராளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதத்தின் போது இந்த கருத்து பரிமாற்றம் இடம்பெற்றுள்ளது.