மேலும் இரு எரிபொருள் கப்பல்கள் இலங்கைக்கு

Prabha Praneetha
2 years ago
மேலும் இரு எரிபொருள் கப்பல்கள் இலங்கைக்கு

கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் 12 நாட்களாக நங்கூரமிட்டிருந்த டீசல் ஏற்றிச் வந்த கப்பலுக்கான பணம் செலுத்தப்பட்டதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

டொலர் தட்டுப்பாடு காரணமாக 20,000 மெற்றிக் தொன் டீசலை ஏற்றிச் வந்த கப்பல் சுமார் 12 நாட்களாக கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் நங்கூரமிட்டிருந்தது.

கப்பலின் உரிமையாளரான சிங்கப்பூர் நிறுவனத்திற்கு 42 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலுத்தப்பட்டதை அடுத்து டீசலை இறக்கும் பணி இன்று ஆரம்பிக்கப்படும் என எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.