மீண்டும் ராணுவ மயமாக்கப்படும் இலங்கை!

Mayoorikka
2 years ago
மீண்டும் ராணுவ மயமாக்கப்படும் இலங்கை!

பாதுகாப்பு என்ற போர்வையில் மீண்டும் இலங்கை ராணுவ மயமாக்கப்படுகிறது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியில் பிரதிப் பொதுச் செயலாளர் கலாநிதி ஸ்ரீ ஞானேஸ்வரன் தெரிவித்தார்.

திருகோணமலையில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இலங்கையின் பொருளாதாரம் அதல பாதாளத்திற்கு சென்று கொண்டிருக்கும் இந்த நிலையில் இலங்கையின் மனித உரிமையும் அதல பாதாளத்தை நோக்கி சென்று கொண்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

இலங்கையில் தமிழ் பிரதேசங்களில் கட்டாயப்படுத்தப்பட்டு இராணுவ மயமாக்கல் நடைபெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கையை தற்போதைய பொருளாதார நிலையில் இருந்து காப்பாற்ற நினைக்கும் நாடுகள் இங்கு நடைபெறும் மனித உரிமை மீறல்களை கருத்தில் கொள்ளவில்லை.

அரசினால் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் தமிழர் மீதான அரச பயங்கரவாத செயற்பாடுகளை ஏன் வெளிநாடுகள் பாராமுகமாக இருக்கிறது அதனை விடுத்து இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து அவதானத்துடன் செயற்பட வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்தார்.

நாட்டில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நிலைமை காரணமாக சொல்லொணாத் துயரத்தை பொதுமக்கள் எதிர்நோக்கிக் கொண்டிருக்கும் காலப்பகுதியில் தமது கருத்துக்களை வெளிப்படுத்த முடியாத அளவிற்கு ராணுவத்தின் மூலமாக ஒடுக்குமுறையை கொண்டுவருவதற்கு இந்த அரசு முயற்சிக்கிறது என அவர் குறிப்பிட்டார்.