மே தின கூட்டத்தை கண்டியில் நடாத்துகின்றது சஜித் தரப்பு!

Prabha Praneetha
2 years ago
மே தின கூட்டத்தை கண்டியில் நடாத்துகின்றது சஜித் தரப்பு!

மே தின கூட்டத்தையும், பேரணியையும் கண்டியில் நடத்துவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் மத்திய செயற்குழுக் கூட்டம் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நேற்று நடைபெற்றது.

இதன்போதே குறித்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.