முன்னாள் அமைச்சர் உள்ளிட்ட நால்வருக்கு விளக்கமறியல்

Mayoorikka
2 years ago
முன்னாள் அமைச்சர் உள்ளிட்ட நால்வருக்கு விளக்கமறியல்

சட்டவிரோதமான முறையில் கஜமுத்துக்களை விற்பனை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் பண்டு பண்டாரநாயக்க உள்ளிட்ட நால்வர் எதிர்வரும் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களை அம்பாறை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அம்பாறை பிரதேசத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.