நாளையதினம் (27) மின்வெட்டு அமுல்படுத்துவது தொடர்பான அட்டவணை - இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு

#SriLanka #Power #Time
நாளையதினம் (27) மின்வெட்டு அமுல்படுத்துவது தொடர்பான அட்டவணை - இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு

- மாகாண ரீதியான மின்வெட்டு பிரதேசங்களின் பட்டியல், மின்வெட்டு விலக்களிப்பு பிரதேசங்களின் பட்டியல் வெளியீடு

நாளையதினம் (27) மின்வெட்டு அமுல்படுத்துவது தொடர்பான அட்டவணையை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

அதற்கமைய நாட்டை 20 வலயங்களாக பிரித்து  (A,B,C,D,E,F,G,H,I,J,K,L வலயத்தில் உள்ள பிரதேசங்களில் இரு கட்டங்களிலும் P,Q,R,S,T,U,V,W வலயத்தில் உள்ள பிரதேசங்களில் ஒரு கட்டமாகவும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய நாளைய (27) மின்வெட்டு:

A,B,C,D,E,F,G,H,I,J,K,L இலுள்ள பிரதேசங்களுக்கு இரு கட்டங்களில் 3½ மணித்தியாலங்கள்:
- மு.ப. 8.30 - பி.ப. 5.30 வரை 2 மணித்தியாலங்கள் 15 நிமிடங்கள்
- பி.ப. 5.30 - இரவு 10.30 வரை 1 மணித்தியாலம் 15 நிமிடங்கள்

P,Q,R,S,T,U,V,W இலுள்ள பிரதேசங்களுக்கு ஒரு கட்டத்தில் 2 மணித்தியாலங்கள்:
- பி.ப. 3.00 - இரவு 11.00 வரை 2 மணித்தியாலங்கள்
மின் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

போதிய எரிபொருள் இன்மை காரணமாக இலங்கை மின்சார சபை விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோளுக்கிணங்க இவ்வாறு மீண்டும் திட்டமிட்ட மின்வெட்டு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது.