இன்றைய தினம் 3 மணிநேரத்துக்கும் அதிக காலம் மின்வெட்டு!

#SriLanka #Power #Lanka4
Reha
2 years ago
இன்றைய தினம் 3 மணிநேரத்துக்கும் அதிக காலம் மின்வெட்டு!

இன்றைய தினம் மின்சாரத்தை துண்டிப்பது தொடர்பில் மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

இதற்கமைய A முதல் L வரையான வலயங்களில் இன்றைய தினம் மூன்று மணித்தியாலங்களும் 30 நிமிடங்களும் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, குறித்த வலயங்களில் காலை 8.30 முதல் மாலை 5.30  வரையான காலப்பகுதியில் 2 மணித்தியாலங்களும் 15 நிமிடங்களும், மாலை 5.30 முதல் இரவு 10.30 வரையான காலப்பகுதியில் ஒரு மணித்தியாலமும் 15 நிமிடங்களும் மின்துண்டிப்பு அமுல்படுத்தப்படவுள்ளது.

அத்துடன் P முதல் W வரையான வலயங்களில் இன்று மாலை 3 மணி முதல் இரவு 11 மணிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் 2 மணிநேரம் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.