உணவுப் பொருட்களைக் கொள்வனவு செய்யும் போது அவதானம் - பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்!

#SriLanka #Food #Lanka4
Reha
2 years ago
உணவுப் பொருட்களைக் கொள்வனவு செய்யும் போது அவதானம் - பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்!

நாட்டில் தற்போது அடிக்கடி மேற்கொள்ளப்படுகின்ற மின்வெட்டினால் குளிர்சாதனப் பெட்டிகளில் வைக்கப்படுகின்ற உணவுப் பொருட்களைக் கொள்வனவு செய்யும் போது அவதானமாக செயற்பட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நாட்டில் தற்போது தொடர்ச்சியாக சுழற்சி முறையில் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
இதன் காரணமாக விற்பனை நிலையங்களில் குளிர்சாதனப் பெட்டிகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள உணவுப் பொருட்கள் குறிப்பிட்ட திகதிக்கு முன்னர் காலாவதியாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு காலாவதியாகும் பொருட்களை பொது மக்களுக்கு விற்பனை செய்த 407 விற்பனையாளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.