மிரிஹான போராட்டத்தில் காயமடைந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு!
Mayoorikka
2 years ago
மிரிஹானாவில் நேற்று இரவு இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் காயமடைந்தோர் எண்ணிக்கை 31ஆக அதிகரித்துள்ளது.
இவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையிலும் களுபோவில கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில் விசேட அதிரடிப்படையினர் 15 பேரும், நுகேகொட ASP உட்பட 3 பொலிஸார் மற்றும் மூன்று ஊடகவியலாளர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, நான்கு பேர் கொழும்பு தெற்கு களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.