ஏப்ரல் 15ஆம் திகதி வரை 24 மணிநேர மின்வெட்டு - சம்பிக்க எச்சரிக்கை
#SriLanka
#Power
#Champika Ranawaka
Prasu
2 years ago
இலங்கையில் நடைமுறையிலுள்ள முறைசாரா நடைமுறைகள் தொடருமானால் ஏப்ரல் 15ஆம் திகதி வரை 24 மணிநேர மின்வெட்டு ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே நாடாளுமன்ற உறுப்பினரான பாட்டலி சம்பிக்க ரணவக்க இந்த எச்சரிக்கையினை அவர் விடுத்துள்ளார்.
மருந்து, உணவு, எரிவாயு மற்றும் எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.