கண்காட்சியை ஆரம்பித்து வைக்க சென்ற ஷிரந்தி ராஜபக்சவிற்கு நேர்ந்த கதி!!

Prabha Praneetha
2 years ago
கண்காட்சியை ஆரம்பித்து வைக்க சென்ற ஷிரந்தி ராஜபக்சவிற்கு நேர்ந்த கதி!!

நுவரெலியாவில் மலர், செடிகள் கண்காட்சியை ஆரம்பித்து வைப்பதற்காகச் சென்ற ஷிரந்தி ராஜபக்சவிடம் மக்கள் தமது எதிர்ப்பை வெளிக்காட்டியுள்ளனர்.

நுவரெலியாவிற்கு மலர் செடிகள் கண்காட்சி இன்று ஆரம்பிக்கவிருந்தது. அந்நிகழ்வை ஆரம்பித்து வைப்பதற்காக ஷிரந்தி ராஜபக்ச அங்கு சென்றிருந்தார்.

இதன்போது அரலியா ஹோட்டல் பெட்ரோல் கொட்டகைக்கு அருகில் உள்ள மக்கள் அவரை பார்த்து ஏளனம் செய்து, சாலையை அடைத்துள்ளனர்.

இதனால் அவர் விழாவில் கலந்து கொள்ளாமல் மீண்டும் கொழும்பிற்குத் திரும்பியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.