அரசாங்க அடக்குமுறைக்கு எதிரான பிரஜைகளின் எழுச்சி நியாயமானது - அனுர

Prathees
2 years ago
அரசாங்க அடக்குமுறைக்கு எதிரான பிரஜைகளின் எழுச்சி நியாயமானது - அனுர

தற்போதைய அரசாங்கத்தினால் மக்கள் மீதான அடக்குமுறைக்கு எதிராக இந்நாட்டு பிரஜைகள் கிளர்ந்தெழுந்து வருவது நியாயமானது என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், சில போராட்டங்களின் ஊடாக தமது தந்திரோபாயங்களை முன்னெடுக்கும் திறன் அரசாங்கத்திற்கு உள்ளதால், மக்கள் அமைதியான முறையில், குறிப்பிட்ட வழிகாட்டுதலின் கீழ் இந்தப் போராட்டங்களை முன்னெடுப்பதில் கவனமாக இருக்க வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஒரு கட்சி என்ற ரீதியில் அதற்காக அனைத்து பங்களிப்பையும் செய்ய தயாராக இருப்பதாகவும் அவர் கூறுகிறார்.