அதிரடியாக நிறுத்தப்படும் ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவைகள் !

Nila
2 years ago
அதிரடியாக நிறுத்தப்படும் ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவைகள் !

ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் சேவையிலுள்ள பல விமானங்களை மே மாதம் 12 ஆம் திகதி முதல் நிறுத்த திடீரென  முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி கொழும்புக்கும் பஹ்ரைனுக்கும் இடையேயான UL201 மற்றும் UL202 விமானங்களை நிறுத்த முடிவு எட்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கொழும்புக்கும் மொஸ்கோவிற்கும் இடையிலான விமான சேவைகள் கடந்த 28ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் மறுஅறிவித்தல் வரை நிறுத்தப்படுவதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் ஏற்கனவே அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.