ரக்பி சம்மேளனத்தின் பதிவினை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தம்!

Mayoorikka
2 years ago
ரக்பி சம்மேளனத்தின் பதிவினை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தம்!

இலங்கை ரக்பி சம்மேளனத்தின் பதிவினை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தி இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, வர்த்தமானி அறிவித்தல் வெளியிட்டுள்ளார்.

இலங்கை ரக்பி சம்மேளனத்தை நிர்வகிப்பதற்கும் ஏனைய விடயங்களை நிர்வகிப்பதற்கும் உரிய வாக்கெடுப்பினை நடத்துவதற்கு உரிய அதிகாரியாக விளையாட்டு அபிவிருத்தித் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அமல் எதிரிசூரிய ஏப்ரல் 01 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில்  நியமிக்கப்பட்டுள்ளார்.