மக்களின் விமர்சனங்களுக்கு ஆட்சியாளர்கள் செவிசாய்க்க வேண்டும் - சஜித்
Prabha Praneetha
2 years ago
ஆட்சியாளர்கள் மக்களின் விமர்சனங்களுக்கு செவிசாய்க்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக செயற்பாட்டாளரான திசர அனுருத்த பண்டாரவை கைது செய்தமை தொடர்பில் விசாரிப்பதற்காக இன்று பிற்பகல் மோதர பொலிஸ் நிலையத்திற்கு வருகை தந்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.