மற்றுமொரு விஷேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டது

#SriLanka #Curfew
Prasu
2 years ago
மற்றுமொரு விஷேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டது

ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் எந்தவொரு பொது வீதி, பூங்கா, மைதானங்கள், புகையிரத வீதிகள், கடற்பரப்புக்கள் போன்ற பொது இடங்களில் மக்கள் நடமாடுவதைத் தடை செய்யும் விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், பாதுகாப்பு அமைச்சு அல்லது பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்கள், பொலிஸ் மா அதிபர் அல்லது வேறு ஏதேனும் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிகளால் எழுத்துப்பூர்வமாக அனுமதி பெற்றவர்களுக்கு விதிவிலக்குகள் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.