ஆர்ஆர்ஆர் பட வெற்றியை தொடர்ந்து ராஜமவுலி இயக்கும் அடுத்த பிரம்மாண்டம்.. கோடி கணக்கில் வசூல் எதிர்பார்ப்பு

Prabha Praneetha
4 years ago
ஆர்ஆர்ஆர் பட வெற்றியை தொடர்ந்து ராஜமவுலி இயக்கும் அடுத்த பிரம்மாண்டம்.. கோடி கணக்கில் வசூல் எதிர்பார்ப்பு

இது உண்மையாக இருந்தால், டோலிவுட்டில் இதுவரை உருவாகும் பெரிய பட்ஜெட் படமாக இது இருக்கும். இது ஒரு பெரிய பட்ஜெட் படம் மட்டுமல்ல, எஸ்.எஸ்.ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர்-ரின் மகத்தான வெற்றிக்குப் பிறகு உருவாகும் படம் என்பதாலும் படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.

 ராஜமௌலியுடன் மகேஷ் பாபு முதல் முறையாக இணைந்திருப்பதால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகமும், எதிர்பார்ப்பிலும் உள்ளனர். அபரிமிதமான பட்ஜெட்டில் உருவாகுவதாலும் அதை எதிர்நோக்க மற்றொரு காரணம்!

மகேஷ் பாபு மற்றும் ராஜமௌலியின் படத்திற்கு கேவி விஜயேந்திர பிரசாத் கதை எழுதுகிறார். இந்த படம் ஆப்பிரிக்கா காடுகளை மையமாக வைத்து எடுக்கப்படும் என்று திரைக்கதை எழுத்தாளர் விஜயேந்திர பிரசாத் ஏற்கனவே கருத்து தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் கதை ஹாலிவுட் படமான ஜேம்ஸ்பாண்ட் கதையை போன்று இருப்பதாக கூறப்படுகிறது. 

ஆனால், இறுதிக் கதை இன்னும் முடிவடையவில்லை என்று விஜயேந்திர பிரசாத் தெரிவித்துள்ளார். இன்னும் தொடங்காத இந்தப் படத்தின் படப்பிடிப்பை பிரமாண்டமாக இருந்தாலும் இன்னும் ஒரு வருடத்திற்குள் முடிக்க ராஜமௌலி திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையில், இயக்குனர் பரசுராம் இயக்கத்தில் மகேஷ் பாபு தனது படத்தை முடித்துள்ளார். “சர்க்காரு வரி பாட்டா” எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்கவுள்ளார்.

மைத்ரி மூவி மேக்கர்ஸ், 14 ரீல்ஸ் ப்ளஸ் மற்றும் ஜிஎம்பி என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரித்துள்ள இப்படம் மே 12ஆம் திகதி வெளியாகவுள்ளது. 

இந்த படத்திற்கு தமன் எஸ் இசையமைக்கிறார். இப்படத்தில் நவீன் சந்திரா, சமுத்திரக்கனி, வெண்ணிலா கிஷோர், நவ்தீப் பிரம்மானந்தம், பிரகாஷ் ராஜ், பவித்ரா லோகேஷ், நதியா, சித்தாரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4