நாளைக்கு 5 மணித்தியாலங்களுக்கு மின்வெட்டு!

Nila
2 years ago
நாளைக்கு 5 மணித்தியாலங்களுக்கு மின்வெட்டு!

நாட்டில் நாளை தினம் சுழற்சிமுறையில் 7 மணித்தியாலங்கள் மின்தடையை அமுலாக்க, இலங்கை மின்சார சபை விடுத்த கோரிக்கையை, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு நிராகரித்துள்ளது.

எனினும், நாளைய தினம் 5 மணித்தியாலங்கள் மின்வெட்டு அமுலாக்கப்பட வேண்டும் என இலங்கை மின்சார சபை குறிப்பிட்டுள்ளது.

அதற்கமைய, A முதல் W வரையான அனைத்து வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களிலும், நாளை காலை முதல் மாலை வரையில் 3 - 4 மணித்தியாலங்களும், மாலை முதல் இரவு 10 மணிக்கிடைப்பட்ட காலப்பகுதியினுள் 1 - 2 மணித்தியாலங்களும் மின்தடை அமுலாக்கப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது..