ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி எடுத்த அதிரடி தீர்மானம் - திணறிப்போயிருக்கும் கோட்டா அரசு

Nila
2 years ago
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி எடுத்த அதிரடி தீர்மானம் - திணறிப்போயிருக்கும் கோட்டா அரசு

நாடாளுமன்றில் சுயாதீனமாக இயங்க சுதந்திரக்கட்சி தீர்மானித்துள்ளது.

அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீர இதனைத் தெரித்துள்ளார்.

இதேவேளை,ஆளுங்கட்சி குழுவினர் பங்குபற்றலுடன் பிரதமர் மற்றும் ஜனாதிபதி ஆகியோரின் தலைமையில் இன்று மாலை ஜனாதிபதி செயலகத்தில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றது.

இதன்போது 132 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

இதனையடுத்தே, சுதந்திரக்கட்சி தமது நிலைப்பாட்டை அறிவித்துள்ளது.

இந்நிலையில், கோட்டாபாயவின் அழைப்பை பெருன்பாண்மையான கட்சிகள் நிராகரித்துள்ளதால் செய்வதறியாது ஆடிப்போயிருக்கிறது கோட்டா அரசு என தென்னிலங்கை செய்திகள் தெரிவிக்கின்றன