பொதுமக்களின் எதிர்ப்புக்கு பயந்து காணி உறுதி வழங்கும் நிகழ்வில் கலந்து கொள்ளாத சமல்
Prathees
2 years ago
சூரியவெவ பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற காணி உறுதி வழங்கும் நிகழ்விலும் அமைச்சர் சமல் ராஜபக்ஷ கலந்து கொள்ளவில்லை.
சூரியவெவ நகர மண்டபத்தில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் எதிர்ப்பு காரணமாக அமைச்சர் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
அமைச்சரின் வருகை தரும் இடத்திற்கு சிறப்பு பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
எனினும் அமைச்சர் வராததால் மகாவலி அதிகாரசபை அதிகாரிகள் தலைமையில் உறுதிப் பத்திரங்கள் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.