ரயில்வே கிராசிங்குகளைப் பயன்படுத்தும் போது இதில் கவனம் செலுத்துங்கள்

#SriLanka #Railway #Power
ரயில்வே கிராசிங்குகளைப் பயன்படுத்தும் போது இதில் கவனம் செலுத்துங்கள்

மின்சாரம் துண்டிக்கப்படும் போது புகையிரத கடவைகளை கடக்கும்போது மிகவும் அவதானமாக இருக்குமாறு புகையிரத திணைக்களம் பொதுமக்களை கோரியுள்ளது.

மின்சாரம் இல்லாத நிலையில், புகையிரத கடவைகளில் பொருத்தப்பட்டுள்ள மின்விளக்கு பலகைகளை செயற்படுத்துவதற்கு மின்கலங்கள் பயன்படுத்தப்படுகின்றன, ஆனால் மின்வெட்டு நீடிப்பதால். அந்த ஒளி சமிக்ஞை அமைப்பு சில நேரங்களில் செயலிழந்துவிடும்.

இதன்காரணமாக மின்வெட்டு முடியும் வரை இவ்வாறான புகையிரத கடவைகளை கடக்கும்போது மிகவும் அவதானமாக இருக்குமாறு புகையிரத திணைக்களம் பொதுமக்களை எச்சரித்துள்ளது.