பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் மோதல்

Mayoorikka
2 years ago
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் மோதல்

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று சபையின் நடுவில் பதாகைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் மிலான் ஜயதிலக்க மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் ஆகியோருக்கு இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.

இதன்போது சபாநாயகர் மீண்டும் சபையை மேலும் 5 நிமிடங்களுக்கு ஒத்திவைத்தார்.