IPL Match15 - லக்னோ அணிக்கு 150 ரன்கள் வெற்றி இலக்கு!

#IPL #T20
Prasu
2 years ago
IPL Match15 - லக்னோ அணிக்கு 150 ரன்கள் வெற்றி இலக்கு!

15வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பையில் இன்று இரவு 7:30 மணிக்கு தொடங்கிய 15வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதுகின்றன.

இதில் டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி, டெல்லி கேப்பிடல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது.

டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்களை சேர்த்துள்ளது. அந்த அணியில் அதிகபட்சமாக தொடக்க வீரர் ப்ரித்வி ஷா 61 ரன்கள் சேர்த்தார்.

பந்துவீச்சில் நெருக்கடி கொடுத்த லக்னோ அணி தரப்பில் அதிகபட்சமாக ரவி பிஷ்னோய் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.