ஒரு கிலோகிராம் ஐஸ் போதைப்பொருள் தொகையுடன் இருவர் கைது

Prabha Praneetha
2 years ago
 ஒரு கிலோகிராம் ஐஸ் போதைப்பொருள் தொகையுடன் இருவர் கைது

சுமார் ஒரு கிலோகிராம் ஐஸ் போதைப்பொருள் தொகையுடன் இரண்டு சந்தேக நபர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

நேற்று  காலை தலைமன்னார் வடக்கு கடற்பரப்பில் படகொன்றில் இருந்து குறித்த ஐஸ் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக தலைமன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.