இணைய இணைப்பு துண்டிப்பு.. ஆர்ப்பாட்டக்காரர்களால் நிரம்பி வழியும் காலி முகத்திடல்

Prathees
2 years ago
இணைய இணைப்பு துண்டிப்பு.. ஆர்ப்பாட்டக்காரர்களால் நிரம்பி வழியும் காலி முகத்திடல்

கொழும்பு காலி முகத்திடலை அண்மித்த பகுதியில் கையடக்க தொலைபேசிகளின் வேகம் குறைந்துள்ளது.

போராட்டத்தின் போது, ​​அருகில் இருப்பவர்கள் கையடக்கத் தொலைபேசியில் பேசுவதையும், இணையத்தில் இணைப்பதையும், நேரலை காணொளிகளைப் பதிவேற்றுவதையும் தடுக்கும் வகையில் கையடக்க சமிக்ஞை தடுப்பு இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்பகுதியில் பெரும் மக்கள் திரண்டுள்ளதாக செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஜனாதிபதி பதவி விலக வேண்டும் எனவும் அரசாங்கம் பதவி விலக வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.